நவம்பர் 17-ல் ஆரம்பமாகும் மாஸ்டர்ஸ் லீக்!

0
5

கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் தலைவராகக் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 6 அணிகள் மோதும் இந்தத் தொடர் நவம்பர் 17 முதல் டிசம்பர் 08ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது,

இந்திய அணியின் தலைவராகச் சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலியாவின் தலைவராக ஷேன் வாட்சனும், இங்கிலாந்து தலைவராக இயோன் மோர்கனும், மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவராகப் பிரையன் லாராவும், தென்னாபிரிக்கா தலைவர் ஜாக் காலிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 17ஆம் திகதி இந்தியா மற்றும் இலங்கை இடையே பரபரப்பான மோதலுடன் போட்டிகள் ஆரம்பமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here