இன்று முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகக் கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தச் சங்கத்தின் செயலாளர் அஜித். கே. திலகரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கல்விசாரா சேவை கொள்கைகளைச் செயற்படுத்துவதாகக் கல்வியமைச்சர் வாக்குறுதிகளை வழங்கியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சருடன் பல தடவைகள் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும் அதிகாரிகள் இதனைச் செயற்படுத்துவதற்குத் தாமதித்து வருகின்றனர்.
குறித்த பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி இன்று முதல் சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகக் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் செயலாளர் அஜித் கே. திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.