தபால் மூல வாக்குச் சீட்டுகள் 23ஆம் திகதி வழங்கப்படும்!

0
1

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி தபால் நிலையத்தில் கையளிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்டச் செயலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல்துறையினருக்கான வாக்குகள் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் வழங்கப்படும்.

ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத் தளங்களில் வாக்குச் சீட்டுகள் நவம்பர் 1 மற்றும் 4ஆம் திகதிகளில் வழங்கப்படும்.

தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிக்கலாம்; அவர்கள் தங்கள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் வாக்களிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here