டெலிகிராம் நிறுவனத்தின் CEO கைது!

0
5

டெலிகிராம் நிறுவனத்தின் CEO பிரான்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு அசர்பைஜானில் இருந்து நாடு திரும்பியபோது பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் வைத்து பாவெல் துரோவ் (CEO) கைது செய்யப்பட்டார்.

தீவிரவாத இயக்கங்களுக்குத் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் உதவுவதாகவும், அதனை டெலிகிராம் நிறுவனம் எந்தத் தடையுமின்றி அனுமதித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெலிகிராம் நிறுவனத்தின் CEO கைது செய்யப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here