ஜெர்மனியின் பவேரியா, பேடன் வுர்ட்டம்பேர்க் மாகாணங்களில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சில ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்குள்ள 10 மாவட்டங்களுக்கு அவசர நிலை விடுக்கப்பட்டு உள்ளது.
தொடர்மழையால் டோனாவ், நெக்கர், குயென்ஸ் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.