ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் இன்று (8.7.2024) காலை 5.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகி உள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.