சுற்றுலா பயணிகள் இருவர் கடலில் மூழ்கி பலி!

0
8

கிரிந்த கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு பெண்ணும் ஆண் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த பெண்ணும் குறித்த நபரும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்துள்ளவர்கள் 35 வயதுடைய ஒருவரும் 33 வயதுடைய ஒருவரும் ஆவார் – இரண்டு பேரும் இந்திய பிரஜைகள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இருவரும் கணவன்-மனைவி என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன்.

குடும்ப உறுப்பினர்களுடன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here