சிலாபத்தில் பெண் ஒருவர் கொலை!

0
3

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்ட விலத்தவ பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 65 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டதாக சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பிங்கிரிய, மூகலன்ஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் விலத்தவ வீதியின் ஓரத்தில் சடலமாக கிடந்ததாக அவரது மகள் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், மகளின் கணவர் உயிரிழந்த பெண்ணை தேடிச் சென்ற போது நபர் ஒருவர் பெண் ஒருவரை தூக்கிச் செல்வதை பார்த்துள்ளார். மோட்டார் சைக்களில் வௌிச்சத்தில் குறித்த நபரை இனங்கண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்படி செயற்பட்ட பொலிஸார் நேற்று இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்து சிலாபம் பொலிஸில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக நபர் வீரபொகுன பிங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here