க.பொ.த சாதாரணத் தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத் தர பரீட்சையின் இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நேற்று (28) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.