தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இன்றைய தினம் (26) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாகக் கொழும்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அத்துடன் அதிபர், ஆசிரியர் சேவையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.