2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று (14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.