அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்த மாதத்திற்கான மேலதிக கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில் பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.