ஐக்கியத் தேசிய கட்சியின் விசேட மாநாடு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்காலத்திற்கு ஐக்கியத் தேசிய கட்சியின் பங்களிப்பு மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரேரணைகள் தொடர்பான பல முன்மொழிவுகளும் இன்று நிறைவேற்றப்படவுள்ளன.