நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக்கூடிய நிலைமை உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34, 906 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, மேல் மாகாணத்தில் இதுவரையில் 14, 248 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற் கொண்டு டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இரத்தினபுரி மாவட்டத்தில் 2,198 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.