உயிரிழந்த சிறுமி மயானத்தில் கண் விழித்த சம்பவம்!

0
6

உயிரிழந்த 3 வயது சிறுமி ஒருவர் மயானத்தில் வைத்துக் கண்விழித்த சம்பவம் மெக்ஸிகோவில் பதிவாகியுள்ளது. வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மயானத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த சிறுமி திடீரெனக் கண் விழித்ததாகவும் அதன் பின்னர் உடனடியாக இறந்துபோனதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here