இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி!

0
12

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா,விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரையில் பல்வேறு அணிகளுடன் 10 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

எனவே, டெஸ்ட் தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காவிட்டால், அவருக்குப் பதிலாக ஹர்த்திக் பாண்டியா அல்லது கே.எல் ராஹூல் ஆகியோரில் ஒருவர் இந்திய அணியை வழிநடத்துவார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 இருபதுக்கு 20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கவுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here