இலங்கையில் மருந்து உற்பத்திக்கு கியூபா முக்கியத்துவம்!

0
2

இலங்கையில் மருந்து உற்பத்தியில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் தெரிவித்தார்.

கியூபா தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடந்த சில வருடங்களில் கியூபா பொருளாதார ரீதியாகச் சவால்களை எதிர்கொண்ட போதிலும், கியூபாவின் தொடர்ச்சியான ஆதரவிற்குத் தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர், கியூபா பிரதமருக்கு இலங்கை விஜயம் செய்ய உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான சுமார் 65 வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்துதல், கியூபா உதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுத்தப்பட்ட கொசு ஒழிப்புத் திட்டங்களை மீள ஆரம்பிப்பது, இலங்கையில் உள்ள பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மருத்துவம் மற்றும் விளையாட்டுக் கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்குதல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here