இலங்கையின் பல பகுதிகளில் மின்தடை!

0
8

சீரற்ற காலநிலையினால் இலங்கையில் மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மீள பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சாரச் சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களில் 61,000 மின்சாரச் செயலிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 26,700 பேருக்கான மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வந்துள்ளதாக இலங்கை மின்சாரச் சபை பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here