இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது. அதன்படி இந்தியா, சீனா மற்றும் பாரிஸ் கிளப் ஒஃப் நேசன்ஸ் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ கடன் குழுவுடன் 5.8 பில்லியன் டொலர் கடனுக்கான இறுதி மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது.
இந்த ஒப்பந்தம் சற்று முன்னர் இறுதி செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.