தாய்லாந்து: அயுத்தயாவில் நிறைமாத கர்ப்பிணி யானை, ஒரே பிரசவத்தில் ஆண், பெண் என இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது இதுவொரு அதிசய நிகழ்வென அங்குள்ள பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக ஒரு யானை ஒரே பிரசவத்தில் இரட்டை குட்டிகளைப் பெற்றெடுப்பதே அரிது, அதிலும் இரு பாலின குட்டிகளை ஈன்றுள்ளது அதைவிட அரிது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த யானைக் குட்டிகளைப் புத்த துறவிகள் ஆசிர்வாதம் செய்தனர்.