லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 பேர் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதில் ஊர்க் காவல் படையினர் துப்புரவு பணியாளர்களும் அடங்குவர் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் வெப்ப அலையின் காரணமாகக் கடந்த ஒரே மாதத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி உட்பட வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த மூன்று மாதங்களில் முழுவதும் வெப்ப அலை காரணமாக 56 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் முழுவதும் வெப்ப அலை காரணமாக 24849 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மே மாதத்தில் மட்டும் 19189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் தட்டுப்பாடும் மின்வெட்டு பாதிப்பும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.