அரச சேவை துறைகளைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கமும் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் இன்று ஆசிரியர் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.