அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்!

0
11

லெபனான் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. மூவர் தூதரகத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தினை உறுதி செய்துள்ள அமெரிக்கத் தூதரகம் தூதரக வாசலை இலக்குவைத்து சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதலை மேற்கொண்டனர் லெபானின் பாதுகாப்பு தரப்பினர் உட்படப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அனைவரும் விரைந்து செயற்பட்டதால் தூதரகமும் எங்கள் குழுவினரும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை சிரியாவை சேர்ந்த ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என லெபனானின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here