அநுர ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் – ஹரிணி!

0
5

இந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்நாட்டு மக்கள் நம்புவதாகவும், தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார என இந்நாட்டு மக்கள் நம்புவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.

நாவலப்பிட்டி மாவத்துறை நகரில் நடைபெற்ற “உடைந்த தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற தலைப்பில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஹரிணி அமரசூரிய, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் கூடியுள்ளனர் எனவும், மக்களைத் தவறாக வழிநடத்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினை நோக்கி திரண்டிருக்கும் நாட்டு மக்கள், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் அவமானங்களை ஏற்காது, நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் படையில் நாளுக்கு நாள் இணைந்து வருகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here