இன்றைய தினம் (27) ஆரம்பிக்கவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்று ஆரம்பிக்கப்படமாட்டாது எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதனால் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நாளை (28) ஆரம்பிக்கப்படும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.