தற்போது அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின், அதிகரிக்கப்பட்ட தொகையைச் செலுத்துவதற்குப் பணம் அச்சிடப்பட வேண்டும் என அதிபரின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் படி, பணம் அச்சிடப்பட்டால் பொருட்களின் விலை மீண்டும் உயரும் என்றும், அதன் மூலம் சம்பளத்தை உயர்த்துவது பலனளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.