மாரிடேனியா படகு விபத்தில் 89 பேர் பலி!

0
2

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் குறித்த படகிலிருந்து 5 வயது சிறுமி உள்பட 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

செனகல் மற்றும் காம்பியாவிலிருந்து 170 பேரை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் படகு கடந்த வாரம் விபத்துக்குள்ளானதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் படகிலிருந்த 72 பேர் மாயமாகியுள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here