பதுளை – சொரணாதொட்ட பகுதியில் இன்று (05) ஏற்பட்ட பாரவூர்தி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே, கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
அத்துடன், இந்த விபத்தில் காயமடைந்த இருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.