நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தாம் தலையிட்டு தீர்வு காண்பதாக வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குறுதி காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) அமுல்படுத்தப்படவிருந்த தொழில் சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி மற்றும் கலால் திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளக தொழிற்சங்கங்களுடன் தமது அமைப்புக்கள் செய்து கொண்ட உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (02) நிதியமைச்சில் அமைச்சர் சியம்பலாபிட்டிய தலைமையில் இடம்பெற்றதுடன், இது தொடர்பான எழுத்துமூல வாக்குறுதியும் இன்று இந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.