தலவாக்கலை கல்கந்தவத்த பாடசாலையில் அதிபர் ஆசிரியர் போராட்டம்!

0
5

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி நுவரெலியா கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை கல்கந்தவத்த தமிழ் வித்தியாலயத்தின் பாடசாலை நேரத்தின் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

குறித்த பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தும் அண்மையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தினரால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டமையைக் கண்டித்தும்

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர்ப் பாடசாலைகளுக்கு முன்பாகப் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here