ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்புப் பாடசாலைகளுக்கு முன்பாக இன்றைய தினம் (02) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. தங்களது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாகப் பதில் வழங்க வேண்டும் எனக் கோரி, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை நேரத்தின் பின்னர்க் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.