இஸ்ரேலின் தரைவழித்தாக்குதலினை தொடர்ந்து காசாவின் ஷுஜேயா பகுதியில் 6,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள குடியிருப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினைத் தொடர்ந்து ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் அந்தத் தாக்குதலில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.