வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பிற்கு அமைய இந்த விஜயம் இடம்பெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த விஜயத்தில் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.