சவுதி அரேபியாவிற்கு இந்த ஆண்டுப் புனித ஹஜ் யாத்திரைக்குச் சென்றவர்களில், கடும் வெப்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ கடந்துள்ளது. மரணித்தவர்களில் 83 சதவீதமானவர்கள் சட்டவிரோதமான முறையில் மக்காவிற்கு யாத்திரைக்குச் சென்றவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மக்காவிற்கான யாத்திரையை மேற்கொள்கின்றவர்கள், தங்குமிட வசதிகள் எதுவும் இன்றி நீண்ட தூரம் கடும் வெப்பத்தில் நடந்து செல்ல நேர்வதால், மரணங்களும் அதிகரிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.