இலங்கையின் சில பகுதிகளில் இன்று (18) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் காலி மற்றும் மத்தளப் பிரதேசங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்புப் பிரதேசங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டு, வட மாகாணம், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் மேற்கு சரிவுகளில் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.