கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் கொண்டு செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, மறு அறிவித்தல் வரை பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
ஹைலெவல் வீதியில் கொடகம சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள பெரிய நீர் குழாயில் கார் மோதியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.