மொண்டெனேகுரோ தேசிய கால்பந்து அணியின் கோல் கீப்பராக இருந்த Matija Sarkic இன்று காலை அவர் திடீரென உயிரிழந்ததாக மொண்டெனேகுரோ கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் மில்வோல் கால்பந்து அணியின் கோல் கீப்பராகவும் இவர் செயற்பட்டுள்ளார்.
26 வயதான Matija Sarkic இறுதியாகக் கடந்த ஜூன் 5 ஆம் திகதி பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் தனது தேசிய அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.