கிளிநொச்சியில் பேருந்து விபத்து!

0
6

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் தனியார் பேருந்தை பின்னால் வந்த அரச பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது திட்டமிட்டு இடம்பெற்றுள்ளதாகப் பயணிகள் குற்றஞ்சாட்டு முன்வைத்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பயனிகளை ஏற்றுவதற்காகத் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரச பேருந்து மோதியுள்ளது. இவ்விரு பேருந்துகளும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் புறப்பட்டு வருவதால் இருவருக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும் இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டுப் பின்னால் வந்து தனியார் பேருந்தை அரச பேருந்து மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்து இடம்பெற்ற இடத்தில் இரு பேருந்துகளின் உடைந்த கண்ணாடி துண்டுகள் வீதியில் கிடந்ததாகவும் பாடசாலை மாணவர்கள் அதிகம் நிற்கும் இடம் அதனால் துப்பரவு செய்து செல்லுமாறு கரந்தாய் கிராம மக்களால் தெரிவிக்கப்பட்ட போது அரச பேரூந்து உத்தியோகத்தர் ஒருவர் தரக்குறைவாக மக்களிடம் பதிலளித்துள்ளதுடன் தம்மால் அதனைச் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here