எந்தவொரு அனர்த்த அழைப்புகளுக்கும் உடனடியாகப் பதிலளிப்பதற்காக இலங்கை விமானப்படையின் BELL 412 ஹெலிகொப்டரை நெலுவ பொது மைதானத்தில் தயார் நிலையில் வைத்துள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படும் வகையில், விமானப்படை மீட்பு குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.