6 பச்சிளம் குழந்தைகளை பலி வாங்கிய மருத்துவமனை!

0
8

டெல்லி – விவேக் விஹார் பிராந்தியத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குறைந்தது 6 சிசுக்கள் உயிரிழந்துள்ளன. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் நேற்று (26) காலை தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலை உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அலட்சியத்திற்குக் காரணமானவர்கள் தப்பிக்க முடியாது எனவும் டெல்லி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here