காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று (18) மாலை இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.