திவுலபிட்டியில் தொழிற்சாலை வெடிப்பு: 1 பலி!

0
4

லபிட்டிய – படல்கம பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்தனர்.

இன்று (14) காலை 06.30 அளவில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் அதன் ஊழியர்கள் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 10 பேர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும், மேலும் 5 பேர் அகரகம மாவட்ட வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கொடதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here