வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தான் தாக்கல் செய்துள்ளார். அவர் இலங்கை தொழிலாளர் கட்சியில் கங்காரு சின்னத்தில் போட்டியிடுகிறார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்த தேர்தல் காரியாலத்தில் இன்று காலை அவர் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்தனர்.