அரையிறுதிக்கான கடைசி எதிர்பார்ப்போடு இந்தியா!

0
7

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் இந்திய மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணி அரை இறுதிக்கான வாய்ப்பினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் குறித்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும்.

அத்துடன் குறித்த இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ள நிலையில் இந்திய அணி 19 போட்டிகளிலும், இலங்கை அணி 5 போட்டிகளிலும் வெற்றிபெற்றது.

மேலும் ஒரு போட்டி வெற்றி தோல்வியற்ற நிலையில் நிறைவடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here