வெள்ளவத்தைக் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இன்று (03) பிற்பகல் வெள்ளவத்தைப் பொலிஸாருக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட 45 வயதுடைய உருவம் கொண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை.
வெள்ளவத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.