மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினத்தில் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் பங்களாதேஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டி இலங்கை நேரப்படி, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது. அதேநேரம், 2ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டி இலங்கை நேரப்படி, இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.