மதுபானசாலைகளை மூட தீர்மானம்!

0
4

உலக மது ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானம் அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர்.

இந்தநிலையில் மது அருந்துவதால் நாட்டில் நாளொன்றுக்கு 50 பேர்வரையில் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே உலக மது ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபாசாலைகளும் மூடப்பட வேண்டும் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here