ஜனாதிபதி – ஜூலி சங் இடையே சந்திப்பு!

0
6

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற அனுரகுமார திஸாநாயக்கவிற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here