ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

0
5

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் குறைந்தது 51% பங்குகளை விற்பனை செய்யும் முன்னைய அரசாங்கத்தின் திட்டங்களை நிறுத்துவதற்குத் தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அரச நிறுவன மறுசீரமைப்புப் பிரிவின் ஊடாக விற்பனை செய்ய முன்னைய அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

இதன்படி, தனியார் முதலீட்டாளரை ஈர்க்கும் நடவடிக்கையாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திடம் உள்ள 510 மில்லியன் டொலர் கடனை பொறுப்பேற்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக, அதன் நிர்வாகத்தை மேலும் வினைத்திறனாக்குவதற்கான வழியைக் காண தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here