“வாழும் போதே வாழ்த்துவோம் ” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் இணைந்து கண்ணகி கலாலயம்,ஐக்கிய சுயத்தொழில் வியாபாரிகள் சங்கம் மற்றும் எமது நாட்டின் சகல கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் தேசிய கலை அரண் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள கலைஞர்களை கௌரவிக்கும் மாபெரும் விருது வழங்கும் விழா எதிர்வரும் 16 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ,ஜனாதிபதி செயலாளர் சமன் ரதன்பிரிய அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதோடு, பௌத்த சம்மேளனம் ,சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு மற்றும் கண்ணகி கலாலயம் ஆகியவற்றின் தலைமை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாபெரும் விருது வழங்கும் விழாவில், சுமார் 750 கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவுள்ளதாக இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு இளங்கோவன் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.